பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி மீது வழக்குப்பதிவு

Update: 2024-01-24 13:36 GMT

சென்னை,

பாஜக பெண் நிர்வாகியை வீடு புகுந்து தாக்கியதாக புகாரை தொடர்ந்து பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வன்கொடுமை தடுப்புச்சட்டம், அத்துமீறி உள்ளே புகுந்து தாக்குதல், காயப்படுத்துதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அமர் பிரசாத் ரெட்டி, அவரது கார் ஓட்டுனர் ஸ்ரீதர் உள்ளிட்ட 4 பேர் மீது கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

மேலும் செய்திகள்