நெல்லையில் தேசிய பேரிடர் மீட்புக்குழு மையம்

Update: 2024-08-29 09:19 GMT

திருநெல்வேலியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் பிராந்திய மையம் விரைவில் செயல்பாட்டுக்கு வருகிறது. கூடங்குளம் ராதாபுரம் மாணவர் தங்கும் விடுதியில் தற்காலிகமாக தேசிய பேரிடர் மீட்புக்குழு மையம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிநவீன மீட்பு உபரகரணங்கள், தொலைத்தொடர்பு சாதனங்களுடன் 24 மணி நேரமும் பிராந்திய மையம் இயங்கும் என கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே அரக்கோணத்தில் தேசிய பேரிடர் மீட்புப்படையின் மையம் செயல்பட்டு வருகிறது. தென் தமிழகம் கேரளாவில் பேரிடர்களின்போது பணியில் ஈடுபட ஏதுவாக நெல்லை மாவட்டத்தில் மையம் அமைய உள்ளது. கதிரியக்கம், ரசாயனம் உள்ளிட்டவை சார்ந்த பேரிடர்களையும் சமாளிக்கும் வகையில் மையத்தில் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்