பாலியல் வன்கொடுமை செய்து 10 வயது சிறுமி கொலை... டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்

டெல்லியில் 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-06-29 12:03 GMT

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள நரேலா பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி நேற்று மதியம் வீட்டை விட்டு வெளியே சென்றவர் அதன் பின் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர், உறவினர் சிறுமியை தேடினர். ஆனால், சிறுமியை கண்டுபிடிக்க முடியாததால் நரேலா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

இந்த நிலையில், நரேலா போலீஸ் நிலையத்திற்கு ஒரு போன் வந்துள்ளது. அதில், சிறுமியின் உடல் ஒரு இடத்தில் கிடப்பதாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் பார்த்த போது காணாமல் போன சிறுமி, தலை துண்டித்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவரது உடல் துணியால் சுற்றப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் பற்றி அப்பகுதி மக்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ராகுல்(20) என்பவர் சிறுமியை அழைத்துச் சென்றதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த ராகுல் மற்றும் அவரது நண்பர் தேவ்தக் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் சிறுமியை சேர்ந்து பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது. இதனால் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்