சபரிமலையில் ரூ.5 கோடி மதிப்பிலான அரவணையை உரமாக மாற்ற டெண்டர்

சபரிமலையில் ரூ.5 கோடி மதிப்பிலான அரவணையை உரமாக மாற்ற தனியார் நிறுவனம் டெண்டர் எடுத்துள்ளது.

Update: 2024-08-21 16:25 GMT

திருவனந்தபுரம்,

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த 2022-2023ம் ஆண்டு மகர விளக்கு பூஜை சீசனில் அரவணையில் அதிக அளவு பூச்சி மருந்து இருப்பதாக கேரள அரசு அறிக்கை வெளியிட்டது. இதற்கு காரணம் பூச்சிக்கொல்லி கலந்த ஏலக்காய் என தெரியவந்தது.

ஆனால், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி நடத்தப்பட்ட சோதனையில் அரவணை பாதுகாப்பானது என சொல்லப்பட்டாலும், 6 மாதங்கள் ஆனதால் அவற்றை உண்ண முடியாது என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து 6.65 லட்சம் அரவணை டின்களையும் அழிக்க நவம்பரில் சுப்ரீம் கோர்ட்டு அனுமதித்தது.

இதனையடுத்து 5 கோடி ரூபாய் மதிப்பிலான அரவணையை அறிவியல் பூர்வமாக அழிக்க தேவசம்போர்டு டெண்டர் விட்டது. சபரிமலையில் வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால், அரவணையை பம்பைக்கு வெளியே கொண்டு சென்று அழிக்க வேண்டும்.

அரவணை டின்களில் ஐயப்பன் படம் இருப்பதால் நம்பிக்கைக்கு பங்கம் ஏற்படாத வகையில் அவற்றை அழிக்க வேண்டும் என்றும் தேவசம்போர்டு கூறியிருந்தது. இந்நிலையில் ஏட்டுமனூரிலுள்ள தனியார் நிறுவனம் அரவணைகளை உரமாக மாற்ற ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு டெண்டர் எடுத்துள்ளது. 

Full View


Tags:    

மேலும் செய்திகள்