பாகிஸ்தானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.1-ஆக பதிவு

பாகிஸ்தான் தலைநகரில் 4.1 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

Update: 2023-01-29 09:26 GMT

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று மதியம் 1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கியது. அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளைவிட்டு வெளியே ஓடிவந்தனர். இந்த நிலநடுக்கத்தில் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பதற்றம் நிலவியது.

இந்த நிலையில் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1-ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தின் ஆழம் 10 கிலோமீட்டர், அதன் மையம் இஸ்லாமாபாத்தில் இருந்து மேற்கே 37 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்