நாளை விஷு கனி தரிசனம்.. சபரிமலையில் குவியும் பக்தர்கள்


நாளை விஷு கனி தரிசனம்.. சபரிமலையில் குவியும் பக்தர்கள்
x

விஷு கனி தரிசனத்தை முன்னிட்டு நாளை அதிகாலை 4 மணிக்கு சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது.

பங்குனி ஆராட்டு மற்றும் சித்திரை விஷு சிறப்பு பூஜைகளுக்காக கடந்த 1-ந்தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. மறுநாள் (2-ந்தேதி) கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.10 நாட்கள் நடைபெற்ற ஆராட்டு திருவிழா முடிவடைந்த நிலையில் சித்திரை விஷு கனி தரிசனம் நாளை (14-ந்தேதி) நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு நாளை அதிகாலை 4 மணிக்கு சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது. நாளை காலை தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு கோவில் தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோர் கை நீட்டமாக நாணயங்களை வழங்குகின்றனர். காலை 7 மணி வரை பக்தர்கள் விஷு கனி தரிசனம் செய்யலாம். இதற்காக சபரிமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். வருகிற 18-ந்தேதி வரை சபரிமலை கோவில் நடை திறந்திருக்கும். அன்று இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.


Next Story