இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா இடையே முத்தரப்பு தொடர் - ஆஸி. கிரிக்கெட் வாரியம் விருப்பம்

இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா முத்தரப்பு தொடர் நடத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது.

Update: 2024-07-03 16:12 GMT

கோப்புப்படம்

மெல்போர்ன்,

இந்தியாவும் பாகிஸ்தானும் இருதரப்பு தொடரை 2012 - 13-க்குப் பிறகு ஆடவே இல்லை. இரு அணிகளும் ஐசிசி தொடர்களில் மட்டுமே சந்திக்கின்றன. இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே முத்தரப்பு தொடரை நடத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி நிக் ஹாக்லி கூறியதாவது, இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும்.

இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகளுக்கு இடையே முத்தரப்பு தொடர் நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் இது தொடர்பான இறுதி முடிவு அந்த இரு நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களின் கையில் தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்