டி20 உலகக்கோப்பையை வென்றபின் மைதானத்தின் மண்ணை சாப்பிட்ட ரோகித்..வீடியோ வைரல்

9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

Update: 2024-06-30 11:05 GMT

image courtesy: instagram/icc

பார்படாஸ்,

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று முடிந்த 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. 17 ஆண்டுகள் கழித்து டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றதை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர்களின் இறுதிப்போட்டிகளில் தோல்வியை தழுவியிருந்தது. இதனால் உணர்ச்சி வசப்பட்ட ரோகித், இந்த வெற்றியை நினைவு கூறும் வகையில் பார்படாஸ் மைதானத்தின் மண்னை சாப்பிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

Tags:    

மேலும் செய்திகள்