ஈரானில் நிலநடுக்கம்: அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டது

ஈரானில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.

Update: 2022-11-17 21:59 GMT

அபுதாபி,

ஈரானில் நேற்று அமீரக நேரப்படி மாலை 6.15 மணியளவில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்கு தேசிய நிலநடுக்க நெட்வொர்க் தளத்தில் இதன் அளவு 5.3 ரிக்டராக பதிவானது. இதன் காரணமாக அமீரகத்தின் துபாய் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் லேசான நில நடுக்கம் உணரப்பட்டது.

இதில் பொதுமக்கள் பலர் தங்கள் வீடுகளில் உள்ள சான்ட்லர்ஸ் எனப்படும் தொங்கும் விளக்குகள் வேகமாக அசைந்ததை சமூக ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் பலர் இருக்கையில் அமர்ந்திருந்தபோது அதிர்வை உணர்ந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நில நடுக்கத்தால் எங்கும் சேதமோ அல்லது காயமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. அமீரக தேசிய வானிலை மையத்தின் தகவலின்படி ஈரான் நில நடுக்கம் துபாய் வழியாக கடந்து சென்றாதாக கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்