ஜோதிடரை தாக்கி நகை, பணம் கொள்ளை

பெங்களூருவில் ஜோதிடரை தாக்கி நகை, பணம் கொள்ளையடித்த சம்பவம் நடந்துள்ளது.

Update: 2022-07-10 14:51 GMT

பெங்களூரு:

பெங்களூரு கெங்கேரி ரெயில் நிலையம் அருகே வசித்து வருபவர் பிரமோத். இவர் ஜோதிடர் ஆவார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை பிரமோத் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது பிரமோத்தின் வீட்டிற்குள் புகுந்த 3 பேர் பிரமோத்தை கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி மிரட்டினர். பின்னர் பிரமோத்தை தாக்கிய 3 பேரும் அவரிடம் இருந்து பீரோ சாவியை பறித்தனர்.

பின்னர் பீரோவில் இருந்த 400 கிராம் தங்கநகைகள், ரூ.5 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்த புகாரின்பேரில் கெங்கேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்