9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: போலீஸ் விசாரணை

9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

Update: 2022-12-30 19:00 GMT

சிக்கமகளூரு:

சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரி தாலுகா அட்டகத்தே கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ். இவரது மகள் சுஷ்மிதா (வயது 15). இவள் அந்தப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக சுஷ்மிதா பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தாள். மேலும் அவள் மிகுந்த சோர்வாக காணப்பட்டாள்.

யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்தாள். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள மரத்தில் சுஷ்மிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாள். இதனை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். இதுபற்றி அறிந்ததும் சிருங்கேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் சுஷ்மிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சிருங்கேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுஷ்மிதா காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்டாளா? அல்லது பள்ளியில் எதுவும் பிரச்சினையா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்