வீட்டுக்குள் புகுந்த நாகபாம்புடன், 4 நாட்கள் தங்கியிருந்த மூதாட்டி

வீட்டுக்குள் புகுந்த நாகபாம்புடன், மூதாட்டி ஒருவர் 4 நாட்கள் தங்கியிருந்த சம்பவம் நடந்துள்ளது.

Update: 2022-06-06 22:46 GMT

பாகல்கோட்டை: பாகல்கோட்டை மாவட்டம் ராபகவி-பனகட்டி தாலுகா குல்லஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மானஷா. இவரது கணவர் சரவவ்வா மவுனேஷ் கம்பாரா. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மானஷாவின் வீட்டுக்குள் நாகபாம்பு புகுந்துள்ளது. பாம்பை பார்த்தால் படை நடுங்கும் என்பார்கள். ஆனால் மானஷா நாகபாம்பை வீட்டுக்கு வந்ததும் இறந்துபோன கணவர் மறுபிறவியாக நாகபாம்பாக வந்திருப்பதாக கருதி அதற்கு பால் ஊற்றி வளர்த்து வந்துள்ளார். 4 நாட்களாக அந்த பாம்புடனே அவர் தங்கியிருந்துள்ளார்.

இதுபற்றி அறிந்த அப்பகுதி மக்கள் பாம்பை பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் மானஷா தனது கணவர் தான் பாம்பு உருவில் வந்துள்ளார் எனக் கூறி பாம்பை பிடிக்க கூடாது என்றும், வீட்டில் இருந்து வெளியேற்ற கூடாது என்றும் கூறி தகராறு செய்துள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்