ஒடிசாவில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம்

ஒடிசாவின் கோரபுட் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 3.8 ஆக பதிவானது.

Update: 2023-03-03 03:35 GMT

கோராபுட்,

ஒடிசாவின் கோரபுட் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 3.8 ஆக பதிவானது. மேலும் நாராயண்பட்னா, லக்ஷ்மிபூர் ஆகிய இடங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்ததாக கூறப்படுகிறது. அதிகாலை 5 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் நன்கு தூங்கிக் கொண்டு இருந்த மக்கள் அச்சம் அடைந்தனர். சில இடங்களில் மக்கள் வெளியில் வந்ததாகவும் அங்குள்ள ஊடகங்கள் கூறுகின்றன. நில அதிர்வால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை தகவல் எதுவும் இல்லை.

Tags:    

மேலும் செய்திகள்