அசாமில் லேசான நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவு
அசாம் மாநிலத்தில் இன்று அதிகாலையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
கம்ரூப்,
அசாம் மாநிலத்தில் இன்று அதிகாலையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை 3:59 மணியளவில் கம்ரூப் மாவட்டத்தில் 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.