காஷ்மீர்: ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - எல்லை பாதுகாப்பு படை வீரர் பலி

ராணுவ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்தார்.

Update: 2023-05-07 17:14 GMT

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யுனியன் பிரதேசம் பூஞ்ச் மாவட்டம் மன்கொட் செக்டார் பகுதியில் இன்று ராணுவ வாகனம் சென்றுகொண்டிருந்தது. இந்த வாகனத்தில் எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் பயணித்தனர்.

மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் எல்லைப்பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்தார். மேலும், 6 வீரர்கள் படுகாயமடைந்தனர்.

படுகாயமடைந்த வீரர்கள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்