முன்விரோதத்தில் வாலிபர் குத்திக் கொலை

உப்பள்ளியில் முன்விரோதத்தில் வாலிபா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2022-11-20 18:45 GMT

உப்பள்ளி:-

வாலிபர் கொலை

உப்பள்ளி நகர் பழைய உப்பள்ளி சதுரசோபா பகுதியை சேர்ந்தவர் ஜாபர் (வயது 28). இவர் நேற்று முன்தினம் இரவு கசபாபேட்டை போலீஸ் எல்லைக்குட்பட்ட கசாய் மகால் பகுதியில் உள்ள மதுபான கடையில் மது அருந்தினாா். பின்னர் அவர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள், ஜாபரை வழிமறித்து தகராறு செய்தனர்.

பின்னா் அவர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் ஜாபரை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

முன்விேராதம் காரணமாக...

இதுபற்றிய தகவல் அறிந்ததும் கசபாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், கொலையான ஜாபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக ஜாபரை மர்மநபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து கசபாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் உப்பள்ளி நகரில் கடந்த சில தினங்களாக கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதால் மக்கள் பீதியில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்