சட்டசபை தேர்தலுக்கு பிறகு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து - அமித் ஷா உறுதி

சட்டசபை தேர்தலுக்கு பிறகு ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா உறுதியளித்தார்.

Update: 2024-09-07 09:37 GMT

 ஜம்மு

காஷ்மீர் சட்டசபை தேர்தல் தொடர்பாக பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று வெளியிட்டார். அதைத்தொடர்ந்து அம்மாநில பா.ஜனதா முக்கிய நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.2 நாள் பயணமாக காஷ்மீர் சென்ற அவர் இன்று பா.ஜனதா தொண்டர்கள் மத்தியில் பேசும்போது கூறியதாவது:-

"காஷ்மீரில் வரவிருக்கும் தேர்தல்கள் வரலாற்றுச் சிறப்புமிக்கவை, ஏனென்றால் சுதந்திரத்திற்குப் பிறகு, நமது தேசியக் கொடி மற்றும் அரசியலமைப்பின் கீழ் தேர்தல்கள் முதன்முறையாக நடக்கின்றன. இரண்டு கொடிகள் மற்றும் இரண்டு அரசியலமைப்புகளின் முந்தைய நடைமுறையைப் போல் இல்லாமல் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எங்களுக்கு ஒரே ஒரு பிரதமர் மோடிதான் என்ற அடிப்படையில் நடைபெறும் தேர்தல் இது. மோடி அரசாங்கத்தால் 370வது பிரிவை ரத்து செய்ததைத் தொடர்ந்து நடைபெறும் முதல் தேர்தல் ஆனால் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கூட்டணி பழைய முறையைப் புதுப்பிக்க முயற்சிக்கிறது.

எந்த சமூகத்திற்கும் அநீதி இழைக்க தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் அனுமதிக்காது.யூனியன் பிரதேசத்தில் பயங்கரவாத சம்பவங்களை அரசாங்கம் 70 சதவீதம் குறைத்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில், ஜம்மு காஷ்மீரை மீண்டும் பயங்கரவாதத்தின் நெருப்பில் தள்ள அவர்கள் முயற்சிக்கிறார்கள். சட்டசபை தேர்தலுக்கு பிறகு ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்.

"தேசிய மாநாடு மற்றும் காங்கிரஸால் ஒருபோதும் காஷ்மீரில் ஆட்சி அமைக்க முடியாது, நமது கட்சியினர் அந்த நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். அடுத்த அரசாங்கத்தை அமைக்க பாஜக வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்யுங்கள்" இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்