மராட்டியம்: தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - 6 பேர் பலி

தொழிற்சாலையில் ஊழியர்கள் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தனர்.

Update: 2023-12-31 02:37 GMT

மும்பை,

மராட்டிய மாநிலம் சத்ரபதி சாம்பாஜி நகர் மாவட்டத்தில் கையுறை தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் நேற்று இரவு பணியை முடித்துவிட்டு ஊழியர்கள் சிலர் தொழிற்சாலை வளாகத்திலேயே உறங்கியுள்ளனர்.

இந்நிலையில், கையுறை தயாரிப்பு தொழிற்சாலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென தொழிற்சாலையின் பல்வேறு பகுதிகளுக்கு பரவியது. இந்த தீ விபத்தில் ஊழியர்கள் சிக்கிக்கொண்டனர்.

தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். தொழிற்சாலைக்குள் சிக்கிய ஊழியர்கள் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனாலும், இந்த தீ விபத்தில் சிக்கி ஊழியர்கள் 6 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்