பராசக்தி மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை


பராசக்தி மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
x

திருவையாறு பராசக்தி மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.

தஞ்சாவூர்

திருவையாறு;

திருவையாறு மேல வீதியில் பராசக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆவணி மாத திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக கணபதி ஹோமம், குங்கும பூஜை நடந்தது. பின்னர் திருவிளக்கு பூஜை நடந்தது. பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பராசக்தி மாரியம்மன் மூலவருக்கு பால், தேன், தயிர், மஞ்சள், சந்தனம் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அலங்கார தீபாராதனை பஞ்சமுக தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story