கவிதையில் கலக்கிய கமல்ஹாசன்


கவிதையில் கலக்கிய கமல்ஹாசன்
x

தமிழில் பிரபல டைரக்டராக இருக்கும் சீனு ராமசாமி, ஒரு கவிஞரும் ஆவார். சமீபத்தில் 'குரு சங்கரன்' என்ற தலைப்பில் ஒரு தாத்தாவின் அன்பை பற்றி கவிதை எழுதியிருந்தார். இந்த கவிதையை படித்த கமல்ஹாசன் தனது நடையில் அவருக்கு பதில் கவிதை கடிதம் எழுதியிருக்கிறார். அதில், 'இக்குருட்டுத் தாத்தாவின் கண்ணுடைப் பேரன் கல்வியாளன் அல்ல. கவியை ஊன்றி நடக்கும் என்னிளம் பேரா என்றேனும், பள்ளி செல்ல மறக்காதே அல்லேல், என்போலே அலைவாய்' என்று குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்து நெகிழ்ந்து மகிழ்ந்து போய் இருக்கிறார் சீனுராமசாமி.


Next Story