தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு


தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
x

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதாகவும், இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், இன்று இரவு 7 மணி வரை தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தர்மபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், தஞ்சாவூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story