மேற்குத்தொடர்ச்சி மலையில் மீண்டும் காட்டுத்தீ



மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்று மீண்டும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் டி.சுப்புலாபுரம் நாழிமலை பகுதிகளில் நேற்று மாலை முதல் 7 இடங்களில் காட்டுத்தீ பரவியது. இது தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், நீண்ட நேரம் போராடி, 7 இடங்களில் பற்றி எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், ஆண்டிப்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்று மீண்டும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. தற்போது 2 இடங்களில் தீயானது பரவி வரும் நிலையில், தீயை அணைக்கும் பணிகளில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire