புரோ கபடி லீக்; தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்திய தமிழ் தலைவாஸ்


புரோ கபடி லீக்; தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்திய தமிழ் தலைவாஸ்
x

Image Courtesy: @ProKabaddi

இந்த தொடரில் இன்று நடைபெறும் 2வது ஆட்டத்தில் புனேரி பால்டன் - அரியான ஸ்டீலர்ஸ் அணிகள் மோத உள்ளன.

ஐதராபாத்,

11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.லீக்கில் 'டாப்-2' இடங்களை வசப்படுத்தும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்குள் அடியெடுத்து வைக்கும். 3 முதல் 6 இடங்களை பெறும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதி அதில் வெற்றி பெறும் 2 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் , இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் தொடக்கம் முதலே தமிழ் தலைவாஸ் வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இறுதியில் இந்த ஆட்டத்தில் 44-29 என்ற புள்ளிக்கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்திய தமிழ் தலைவாஸ் வெற்றி பெற்றது. இதையடுத்து இந்த தொடரில் இன்று நடைபெறும் 2வது ஆட்டத்தில் புனேரி பால்டன் - அரியான ஸ்டீலர்ஸ் அணிகள் மோத உள்ளன.


Next Story