பாரீஸ் ஒலிம்பிக்: இந்திய மல்யுத்த வீராங்கனை ரித்திகா காலிறுதிக்கு முன்னேற்றம்


பாரீஸ் ஒலிம்பிக்: இந்திய மல்யுத்த வீராங்கனை ரித்திகா காலிறுதிக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 10 Aug 2024 10:25 AM GMT (Updated: 10 Aug 2024 10:54 AM GMT)

ஹங்கேரி வீராங்கனையை வீழ்த்தி ரித்திகா காலிறுதிக்கு முன்னேறினார்.

பாரீஸ்,

33-வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இறுதிகட்டத்தை எட்டிவிட்ட இந்த தொடரில் இந்தியா இதுவரை 6 பதக்கங்கள் (1 வெள்ளி, 5 வெண்கலம்) வென்றுள்ளது. இந்நிலையில் மகளிர் மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை ரித்திகா காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

76 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் இந்திய வீராங்கனை ரித்திகா - ஹங்கேரி வீராங்கனை பெர்னாடட் நாகி ஆகியோர் மோதினர். இதில் ரித்திகா 12-2 என்ற புள்ளிக்கணக்கில் ஹங்கேரி வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.


Next Story