மகளிர் உலகக் கோப்பை: இங்கிலாந்து அணிக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சமாரி அதபத்து பந்துவீச்சை தேர்வு செய்தார்
கொழும்பு,
13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்நிலையில், மகளிர் உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் 12வது லீக் ஆட்டத்தில் இலங்கை , இங்கிலாந்து மோதுகின்றன. இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள மைதானத்தில் ஆட்டம் நடைபெறுகிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சமாரி அதபத்து பந்துவீச்சை தேர்வு செய்தார்.அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
Related Tags :
Next Story






