மகளிர் ஒருநாள் கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து


மகளிர் ஒருநாள் கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து
x

Image Courtesy: @englandcricket

இங்கிலாந்து தரப்பில் எக்லெஸ்டோன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

லண்டன்,

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை முதல்முறையாக வென்ற இந்திய அணி அடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் சவுத்தம்டனில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று நடைபெற்றது.

ஆனால் அங்கு மழை பெய்ததன் காரணமாக இந்த போட்டி ஏறக்குறைய இரண்டரை மணி நேரம் தாமதமாக தொடங்கியதன் காரணமாக ஆட்டம் தலா 29 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா 29 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 143 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக மந்தனா 42 ரன் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் எக்லெஸ்டோன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து இலக்கை நோக்கிய ஆடிய இங்கிலாந்து அணி 21 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 116 ரன் எடுத்த போது மழை மீண்டும் பெய்தது. இதன் காரணமாக ஆட்டம் தடைபட்டது. இதையடுத்து டி.எல்.எஸ் முறைப்படி இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என சமனில் உள்ளது.

1 More update

Next Story