மகளிர் கிரிக்கெட்; இங்கிலாந்து கேப்டன் பதவியில் இருந்து விலகிய ஹெதர் நைட்


மகளிர் கிரிக்கெட்; இங்கிலாந்து கேப்டன் பதவியில் இருந்து விலகிய ஹெதர் நைட்
x

Image Courtesy: @englandcricket

இங்கிலாந்து கேப்டன் பதவியில் இருந்து ஹெதர் நைட் விலகி உள்ளார்.

லண்டன்,

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடியது. இந்த தொடரில் ஒரு வெற்றி கூட பெறாமல் இங்கிலாந்து தோல்வி கண்டு தாயகம் திரும்பியது.

இதன் காரணமாக இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி கடும் விமர்சங்களை சந்தித்தது. இந்நிலையில், இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனகா செயல்பட்டு வந்த ஹெதர் நைட் அந்த பதவியில் இருந்து விலகி உள்ளதாக அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்காக கடந்த 2016ம் ஆண்டு முதல் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹெதர் நைட் 199 ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்துள்ளார். இதில் 137 ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ளார். இவரது தலைமையில் 2017 ஒருநாள் உலகக்கோப்பை தொடரை இங்கிலாந்து அணி வென்றிருந்தது.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இங்கிலாந்து படுதோல்வி அடைந்ததை அடுத்து அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகி உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story