டி.என்.பி.எல்.: மதுரைக்கு எதிராக டாஸ் வென்ற திருப்பூர் பந்துவீச்சு தேர்வு


டி.என்.பி.எல்.: மதுரைக்கு எதிராக டாஸ் வென்ற திருப்பூர் பந்துவீச்சு தேர்வு
x

image courtesy: twitter/@TNPremierLeague

தினத்தந்தி 13 July 2024 9:22 AM GMT (Updated: 13 July 2024 9:26 AM GMT)

டி.என்.பி.எல். தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

கோவை,

8 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. இங்கு அரங்கேறிய முதல் 9 லீக் ஆட்டங்கள் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. இந்த போட்டி தொடரில் நேற்று ஓய்வு நாளாகும்.

இந்த நிலையில் இதன் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இங்கு 8 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

அதில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. மாலை 3.15 மணிக்கு மதுரை பாந்தர்ஸ்-திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி மதுரை முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.


Next Story