டி.என்.பி.எல்.: திண்டுக்கல் அணிக்கு எதிராக டாஸ் வென்ற திருச்சி பந்துவீச்சு தேர்வு


டி.என்.பி.எல்.: திண்டுக்கல் அணிக்கு எதிராக டாஸ் வென்ற திருச்சி பந்துவீச்சு தேர்வு
x
தினத்தந்தி 6 July 2024 9:39 AM GMT (Updated: 6 July 2024 9:42 AM GMT)

டி.என்.பி.எல். தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

சேலம்,

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.என்.பி.எல். கிரிக்கெட் 2016-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. இதுவரை 7 சீசன் நடந்துள்ளது. 8-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி நேற்று சேலத்தில் தொடங்கியது . சேலம், நெல்லை, கோவை, நத்தம் (திண்டுக்கல்), சென்னை ஆகிய 5 நகரங்களில் நடைபெறும் இந்த போட்டியில் 8 அணிகள் பங்கேற்கின்றன.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. மாலை 3.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற திருச்சி அணியின் கேப்டன் அந்தோனி தாஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி திண்டுக்கல் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.


Next Story