டி.என்.பி.எல்.: திண்டுக்கல் அணிக்கு எதிராக டாஸ் வென்ற சேப்பாக் பந்துவீச்சு தேர்வு


டி.என்.பி.எல்.: திண்டுக்கல் அணிக்கு எதிராக டாஸ் வென்ற சேப்பாக் பந்துவீச்சு தேர்வு
x
தினத்தந்தி 14 July 2024 1:41 PM GMT (Updated: 14 July 2024 1:49 PM GMT)

டி.என்.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் 2-வது ஆட்டத்தில் சேப்பாக் - திண்டுக்கல் அணிகள் மோதுகின்றன.

கோவை,

8 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது.

இங்கு அரங்கேறிய முதல் 9 லீக் ஆட்டங்கள் கடந்த 11ம் தேதி நிறைவடைந்ததை அடுத்து தற்போது 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிமைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதன்படி இரவு 7.15 மணிக்கு நடைபெறுகின்ற ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

அங்கு மழை பெய்ததன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது மழை நின்றதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி திண்டுக்கல் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

இருப்பினும் அவுட் பீல்டு ஈரமாக இருப்பதன் காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.


Next Story