இந்தியா ஏ - இங்கிலாந்து லயன்ஸ் முதல் டெஸ்ட்: கருண் நாயர் இரட்டை சதம் விளாசல்


இந்தியா ஏ - இங்கிலாந்து லயன்ஸ் முதல் டெஸ்ட்: கருண் நாயர் இரட்டை சதம் விளாசல்
x

image courtesy:PTI

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

கேன்டர்பரி,

இந்தியா ஏ- இங்கிலாந்து லயன்ஸ் கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது ஆதிகாரபூர்வமற்ற டெஸ்ட் (4 நாள் ஆட்டம்) போட்டி கேன்டர்பரியில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் அணியின் கேப்டன் ஜேம்ஸ் ரியூ பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஏ அணி நேற்றைய ஆட்டநேரம் முடிவில் 3 விக்கெட்டுக்கு 409 ரன்கள் அடித்திருந்தது. கருண் நாயர் 186 ரன்களுடனும், துருவ் ஜூரெல் 82 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். சர்பராஸ் கான் 92 ரன்களிலும், ஜெய்ஸ்வால் 24 ரன்களிலும், அபிமன்யு ஈஸ்வரன் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய ஏ அணியில் கருண் நாயர் இரட்டை சதம் விளாசினார். இரட்டை சதம் அடித்த சிறிது நேரத்திலேயே கருண் நாயர் 204 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனிடையே துருவ் ஜூரெல் 94 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நிதிஷ் ரெட்டி 7 ரன்களிலும் , ஷர்துல் தாகூர் 27 ரன்களிலும் வெளியேறினர்.

தற்போது வரை இந்திய ஏ அணி 119 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 533 ரன்கள் குவித்துள்ளது. ஹர்ஷ் துபே 32 ரன்களுடனும், அன்ஷுல் கம்போஜ் 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

1 More update

Next Story