அகமதாபாத் விமான விபத்து: விராட் கோலி வருத்தம்


அகமதாபாத் விமான விபத்து: விராட் கோலி வருத்தம்
x

சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அகமதாபாத்,

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. அகமதாபாத் விமானம் நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பற்றியது. விமானத்தில் இருந்த 242 பயணிகளில் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

இன்று அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து குறித்து கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன். விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் அவர்களின் குடும்பங்களுக்காகவும் பிரார்த்திக்கிறேன். என தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story