4-வது டெஸ்ட்: ரிஷப் பண்ட் காயம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிட்ட பி.சி.சி.ஐ.


4-வது டெஸ்ட்: ரிஷப் பண்ட் காயம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிட்ட பி.சி.சி.ஐ.
x

image courtesy:PTI

இங்கிலாந்து - இந்தியா 4-வது டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தில் காயம் காரணமாக ரிஷப் பண்ட் பாதியில் வெளியேறினார்.

மான்செஸ்டர்.

இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 83 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 264 ரன்கள் அடித்திருந்தது. ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தலா 19 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இத்தகைய சூழலில் 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பேட்டிங் செய்து வரும் இந்திய அணி ஜடேஜாவின் விக்கெட்டை இழந்து விளையாடி வருகிறது.

நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் 37 ரன்களில் ஆடிக்கொண்டிருந்தபோது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதியில் வெளியேறினார். கிறிஸ் வோக்ஸ் வீசிய யார்க்கர் பந்தை 'ரிவர்ஸ் ஸ்வீப்' ஷாட் அடிக்க முயற்சித்தபோது பந்து, பேட்டில் லேசாக உரசியபடி அவரது வலது காலை பதம் பார்த்தது. ஷூவை கழற்றி பார்த்தபோது, பாதத்தில் ரத்தம் கசிந்தது. வலியால் துடித்த ரிஷப் பண்ட் (37 ரன்) அத்துடன் வெளியேறினார். காலில் பெரிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் ரிஷப் பண்டின் காயம் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, "மான்செஸ்டர் டெஸ்டின் முதல் நாளில் வலது காலில் காயம் ஏற்பட்ட ரிஷப் பண்ட், போட்டியின் மீதமுள்ள நாட்களில் விக்கெட் கீப்பிங் பணிகளைச் செய்ய மாட்டார். துருவ் ஜூரெல் விக்கெட் கீப்பராகப் பொறுப்பேற்பார். காயம் இருந்தபோதிலும், ரிஷப் பண்ட் அணியுடன் இணைந்துள்ளார். மேலும் தேவைப்பட்டால் அவர் பேட்டிங் செய்வார்" என்று அறிவித்துள்ளது.

1 More update

Next Story