3-வது டி20 போட்டி: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு


3-வது டி20 போட்டி: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு
x

Image Courtesy : AFP

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ராஜ்கோட்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் கொல்கத்தாவில் நடந்த தொடக்க ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், சென்னையில் நடந்த 2-வது ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று, தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டி20 போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணையின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

1 More update

Next Story