இரவு 7 மணி வரை 3 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு


இரவு 7 மணி வரை 3 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு
x
தினத்தந்தி 29 Jan 2025 5:45 PM IST (Updated: 30 Jan 2025 5:43 PM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்பட 3 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். மேலும் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழகத்தின் 3 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story