மாலை 4 மணி வரை 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு


மாலை 4 மணி வரை 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
x

கோப்புப்படம்

மாலை 4 மணி வரை 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

லட்சத்தீவு, கேரளா மற்றும் வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் வருகிற 14-ந்தேதி வரை மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் மாலை 4 மணி வரை 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, விருதுநகர், தூத்துக்குடி, தஞ்சை, புதுக்கோட்டை, தென்காசி, தேனி, ராமநாதபுரம், நாகை, திருவாரூர், நீலகிரி, கோவை, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story