திருநெல்வேலியில் லாரி மோதி பெண் பலி

நேற்று இவர் டவுன் வழுக்கோடை அருகே மகனை பஸ் ஏற்றி விடுவதற்காக நின்று கொண்டிருந்தார்.
திருநெல்வேலி டவுன் பர்வதராஜசிங் தெருவை சேர்ந்தவர் தங்கதுரை. இவருடைய மனைவி காமாட்சி. நேற்று இவர் டவுன் வழுக்கோடை அருகே மகனை பஸ் ஏற்றி விடுவதற்காக நின்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த லாரியானது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து காமாட்சி மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த காமாட்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் அவர் இறந்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





