தவெக தலைவர் விஜய்யின் பிரசாரத்திற்கு 23 நிபந்தனைகள் விதித்த திருச்சி காவல்துறை

திருச்சியில் பிரசாரம் செய்ய தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்-க்கு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது.
திருச்சி,
2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மக்களுடன் சந்திப்பு என்ற பெயரில் தமது முதல் சுற்றுப்பயணத்தை வருகிற 13-ம் தேதி தொடங்குகிறார். திருச்சி மரக்கடை பகுதியில்
தவெக தலைவர் விஜய்-யின் பிரசாரத்திற்கு 23 நிபந்தனைகள் விதித்தது திருச்சி காவல்துறை.
* விஜய்யின் வாகனத்திற்கு பின்னால் 5 வாகனங்களுக்கு மேல் எந்தவொரு வாகனமும் அனுமதிக்கப்படாது
* விஜய் வாகனத்தின் முன்னும் பின்னும் தொண்டர்கள் பைக், 4 சக்கர வாகனங்களில் ஊர்வலமாக வரக்கூடாது
* பரப்புரையின் போது வரக்கூடிய வாகனங்களுக்கான பார்க்கிங் வசதிகளை தவெகவினரே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்
* கர்ப்பிணிகள், குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் வருவதை தவிர்த்திட வேண்டும்.
மரக்கடையில் பிரசாரம் முடிந்ததும் பால்பண்ணை வழியாக சென்னை பைபாசில் லால்குடி, வாளாடி கிராமத்துக்குள் செல்லாமல் அரியலூர் மாவட்டத்திற்கு செல்ல வேண்டும்.
உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இது தவெக தொண்டர்கள் நிர்வாகிகளை அதிருப்தி அடைய செய்துள்ளது.
இதற்கிடையே கடந்த 6-ம் தேதி பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திருச்சி விமான நிலையம் எதிரே விநாயகர் கோவில் பகுதியில் கமிஷனரை சந்திப்பதற்கு முன்பாக கட்சியிடன் உடன் ஆலோசனை நடத்தினால் இதில் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ஆனந்த் உள்ளிட்ட 6 நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருச்சி போலீசாரின் அடுத்தடுத்த இந்த நடவடிக்கைகள் கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.






