ஈரோட்டில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை


ஈரோட்டில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
x
தினத்தந்தி 22 Oct 2024 2:10 AM GMT (Updated: 22 Oct 2024 2:38 AM GMT)

நாமக்கல்லில் பள்ளிப்பாளையம் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு,

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், கர்நாடக மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, இன்று திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

இந்த சூழலில், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் அதிகாலை முதலே கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதேபோல, நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிப்பாளையம் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


Next Story