திருச்செந்தூர்: குடும்ப பிரச்சினையில் வாலிபர் வெட்டிக்கொலை- உறவினர் கைது

திருச்செந்தூர் வீரபாண்டியபட்டினத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடி
திருச்செந்தூர் வீரபாண்டியபட்டினத்தைச் சேர்ந்த தங்கராஜ் மகன் ஜெகதீஷ் (வயது 32) என்பவருக்கும் அவரது உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த தேவராஜ் மகன் ஜவகர்(32) என்பவருக்கும் குடும்பப் பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று (21.5.2025) இரவு ஜெகதீஷ் அவரது நண்பர் ஒருவருடன் சேர்ந்து ஜவகர் வீட்டிற்கு சென்று அவரது வீட்டு வாசலில் வைத்து ஜவகரிடம் தகராறு செய்துள்ளார். அப்போது ஜவகருக்கும் ஜெகதீசுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு, இதில் ஆத்திரம் அடைந்த ஜவகர், ஜெகதீசனை வெட்டியுள்ளார். இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஜெகதீசன் உயிரிழந்தார். இந்த கொலை வழக்கு குறித்து திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் உடனடியாக ஜவகரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story






