'கூடங்குளம் அணுக்கழிவுகளால் கதீர்வீச்சு அச்சுறுத்தல்' - சபாநாயகர் அப்பாவு பேச்சு


கூடங்குளம் அணுக்கழிவுகளால் கதீர்வீச்சு அச்சுறுத்தல் - சபாநாயகர் அப்பாவு பேச்சு
x

கூடங்குளம் அணுக்கழிவுகளால் தென் தமிழக கடலோர மக்களுக்கு கதீர்வீச்சு அச்சுறுத்தல் இருப்பதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

நெல்லை,

கூடங்குளம் அணுஉலையில் இருந்து வெளியேற்றப்படும் அணுக்கழிவுகள் நமக்கு பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். இது குறித்து நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;-

"தமிழகத்தின் தென் மாவட்டங்களில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக தென் தமிழக கடலோர மாவட்டங்களில் தாது மணவில் கதிர்வீச்சு இருப்பதாக கூறுகிறார்கள். அதுமட்டுமின்றி கூடங்குளம் அணுஉலையில் இருந்து வெளியேற்றப்படும் அணுக்கழிவுகள் நமக்கு பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது.

ஏற்கனவே கூடங்குளத்தில் செயல்பாட்டில் இருக்கும் 1 மற்றும் 2-ம் அலகுகளில் கழிவுகள் நிறைந்துவிட்டன. அவற்றை என்ன செய்யப்போகிறார்கள் என்பது தெரியவில்லை. இந்த அச்சுறுத்தல் தென் தமிழக பகுதிக்கு இருக்க கூடாது. ராஜஸ்தான் பாலைவனம் போன்ற பகுதிகளுக்கு அதை கொண்டு சென்றால், இந்த பகுதி மக்கள் கதிரியக்கத்தில் இருந்து பாதுகாக்கப்படுவார்கள்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story