தென்காசி: விடுதி உணவை சாப்பிட்ட மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி


தென்காசி: விடுதி உணவை சாப்பிட்ட மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி
x

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் உள்ள பள்ளி விடுதியில் 53 மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.

தென்காசி ,

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி விடுதியில் 53 மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்த விடுதியில் வழக்கம் போல இன்று காலை மாணவிகளுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதனை சாப்பிட்ட 6-ம் வகுப்பு மாணவிகள் மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகள் என 9 பேருக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு 9 மாணவிகளும் தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் விடுதியில் சாப்பிட்ட பிற மாணவர்களுக்கு ஏதேனும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story