கூட்ட நெரிசலை தவிர்க்க தாம்பரம் - மதுரை ரெயில்களில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைப்பு

கோப்புப்படம்
கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தாம்பரம் - மதுரை செல்லும் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை
கூட்ட நெரிசலைக் குறைக்க பின்வரும் ரெயில்களில் (இன்று) மார்ச் 22 முதல் ஏப்ரல் 26 வரை தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது:
அதன்படி மதுரை - தாம்பரம் செல்லும் (வண்டி எண்: 22624) அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக மூன்று ஏசி 3 டயர் பெட்டிகள் மற்றும் ஒரு ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்படும்.
தாம்பரம் - மதுரை செல்லும் (வண்டி எண்: 22623) அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக மூன்று ஏசி 3 டயர் பெட்டிகள் மற்றும் ஒரு ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்படும் என தெரிவிக்கப்படுள்ளது.
Related Tags :
Next Story






