ஈரோட்டில் திருப்பூர் குமரன், ஈ.வெ.கி.சம்பத் உருவச்சிலைகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

ஈரோடு மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி வைத்ததாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
விடுதலைப் போராட்ட வீரர் கொடி காத்த திருப்பூர் குமரன் மற்றும் சொல்லின் செல்வர் ஈ.வெ.கி.சம்பத் ஆகியோரது உருவச் சிலைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இது தொடர்பாக அவர் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“தியாகத் தலைவர்களை தந்த ஈரோட்டு மண்ணின் பெருமையை எடுத்துக்காட்டும் வகையில், ஈரோட்டில், விடுதலைப் போராட்ட வீரர் கொடி காத்த திருப்பூர் குமரன் மற்றும் சொல்லின் செல்வர் ஈ.வெ.கி.சம்பத் ஆகியோரது திருவுருவச் சிலைகளைத் திறந்து வைத்தேன். ஈரோடு மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி, இந்தத் தலைவர்களின் புகழைப் போற்றினேன்!”
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story






