மாநிலங்களவை தேர்தல் - அ.தி.மு.க. வேட்பாளர்கள் நாளை வேட்புமனு தாக்கல்


மாநிலங்களவை தேர்தல் - அ.தி.மு.க. வேட்பாளர்கள் நாளை வேட்புமனு தாக்கல்
x

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அலுவலகத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்கள்

சென்னை,

அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,

பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் 19.6.2025 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் இன்பதுரை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. அவைத் தலைவர் தனபால் ஆகியோர், தங்களது வேட்பு மனுக்களை, நாளை நண்பகல் 12.45 மணிக்கு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அலுவலகத்தில் தாக்கல் செய்ய உள்ளார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story