இளைஞர்களின் நலனில் அக்கறை இல்லாத ரெயில்வே துறை - செல்வப்பெருந்தகை கண்டனம்


இளைஞர்களின் நலனில் அக்கறை இல்லாத ரெயில்வே துறை - செல்வப்பெருந்தகை கண்டனம்
x

கோப்புப்படம் 

இளைஞர்களின் கனவுகளை மத்திய ரெயில்வே துறை சிதைக்கின்றது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

சென்னை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

நாட்டில் இளநிலை நீட், யுஜிசி நெட் தேர்வு வினாத்தாள் கசிவால் ஏறத்தாழ 85 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டிருப்பதாக தலைவர் ராகுல்காந்தி பதிவு செய்தார். வினாத்தாள் கசிவிற்கு பிறகு, தற்போது உதவி லோகோ பைலட் தேர்வை நடத்தும் ஆர்.ஆர்.பி.யானது, தொழில்நுட்ப காரணங்களால் தேர்வை ரத்து செய்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.

தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் தேர்வு மையம் அமைத்திருந்தபோதும் மிகுந்த சிரமத்துடன் இன்று தேர்வு எழுத சென்றவர்களை அலைக்கழித்துள்ளது ரெயில்வே துறை.

எதிர்கால கனவுடன் தேர்வு எழுதச் சென்ற இளைஞர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் கனவுகளை சிதைக்கின்றது மத்திய ரெயில்வே துறை. இளைஞர்களுக்கு ஏற்பட்டிருக்கிற மனவுளைச்சலுக்கு மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், இளைஞர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story