ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து பயணி சாவு

கோப்புப்படம்
நெல்லையில் ரெயிலில் பயணித்த வடமாநிலத்தை சேர்ந்தவர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
நாங்குநேரி- நெல்லை ரெயில் பாதையில் மருகால்குறிச்சி அருகே நேற்று மதியம் ஒருவரின் உடல் கிடந்தது. இதுபற்றி தகவல் அறிந்த நாங்குநேரி போலீசாரும், நாகர்கோவில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது இறந்து கிடந்தவர் வெளிமாநிலத்தை சேர்ந்தவர் எனவும், ரெயிலில் வரும்போது தவறி கீழே விழுந்து இறந்ததும் தெரியவந்தது. அவரது பெயர் விவரம் எதுவும் உடனடியாக தெரியவில்லை.
இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





