சென்னையில் மூதாட்டியை தாக்கி 2 பவுன் நகை பறிப்பு

மூதாட்டியை கீழே தள்ளிவிட்டு 2 பவுன் சங்கிலியை பறித்து சென்றுவிட்டனர்.
சென்னை,
சென்னை அண்ணா நகர், 'ஒய்' பிளாக் 5-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (வயது 73). நேற்று முன்தினம் இரவு கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், ஜெயலட்சுமி கழுத்தில் கிடந்த தங்்கச்சங்கிலியை பறிக்க முயன்றனர். அதிர்ச்சி அடைந்த மூதாட்டி கூச்சலிட்டதால் அவரை தாக்கி, கீழே தள்ளிவிட்டு 2 பவுன் சங்கிலியை பறித்து சென்றுவிட்டனர்.
இதில் காயம் அடைந்த மூதாட்டியை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த அண்ணா நகர் போலீசார், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து நகை பறிப்பில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story






