நீலகிரி: விளைநிலங்களில் தேங்கிய மழைநீர் - காய்கறிகள் அழுகி சேதம்

காய்கறிகளின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி, நீலகிரி மாவட்டத்திலும் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
இதன் காரணமாக விளைநிலங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. மழைநீர் தேங்கியுள்ளதால் காரட், பீட்ரூட், பூண்டு உள்ளிட்ட காய்கறிகள் அழுகி சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கனமழையால் காய்கறிகள் சேதமடைந்துள்ளதால் சந்தைகளுக்கு காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





