மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் இன்று முதல் இயக்கம்


மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் இன்று முதல் இயக்கம்
x

கனமழை காரணமாக ஊட்டி மலை ரெயில் சேவை இரண்டு நாட்கள் ரத்து செய்யப்பட்டன.

ஊட்டி,

கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்தது. நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் -ஊட்டி மலை ரெயில் பாதையில் ஆங்காங்கே சிறு, சிறு மண் சரிவு மற்றும் ரெயில் பாதை ஓரத்தில் அருவிகள் தோன்றின. தண்டவாளத்தை மறைத்தபடி தண்ணீர் ஓடியது.

இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் நலன் கருதி கடந்த 16 மற்றும் 17-ந் தேதி ஆகிய 2 நாட்கள் மேட்டுப்பாளையம் -ஊட்டி மலை ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்தது.தற்போது நீலகிரி மாவட்டத்தில் மழை அளவு குறைந்தது. மேலும் தண்டவாளத்திலும் தண்ணீர் வடிந்தது.

இந்த நிலையில், மேட்டுப்பாளையம்- ஊட்டி மற்றும் ஊட்டி- மேட்டுப்பாளையம் மலை ரெயில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மீண்டும் இயக்கப்படும் என்று சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


Next Story